இதையடுத்து நீதிபதிகள், ‘‘மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்கவும், அங்கிருந்து வௌியேற்றவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாக தமிழ்நாடு அரசின் டான்டீ நிறுவனமே, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்தலாமா என்பது குறித்து அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். பிபிடிசி நிறுவனம் தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வௌியேற்றக்கூடாது. கடைசி தொழிலாளி அங்கிருக்கும் வரை குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட வேண்டும். அரசின் டான்டீ நிறுவனம் ஏற்று நடத்துவது குறித்தும் பதிலளிக்க வேண்டும்’’ எனக் கூறி ஜூலை 30க்கு தள்ளி வைத்தனர்.
The post மாஞ்சோலை எஸ்டேட்டை அரசு ஏற்று நடத்தலாமா? பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.