திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாலை 2 மணியளவில் ரோந்து சென்றபோது கல்லாமொழியில் வந்த லாரியை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட 30 கிலோ எடை கொண்ட 106 பீடி இலை மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை ஓட்டி வந்த அருள் விஜயகாந்த் (35) மற்றும் பாண்டியனை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: