ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது பெண்கள் புகார்

 

பல்லடம், ஜூலை 21: ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது பல்லடம் போலீஸ் நிலையத்தில் பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் வசிக்கும் பெண் மற்றும் காங்கயம் பகுதியை சேர்ந்த இன்னொரு பெண் ஆகிய இருவரும் தனியார் ஆன்லைன் செயலியில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். முதல் 2 மாதங்கள் மட்டும் பணம் வந்ததாகவும் அடுத்தடுத்து பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தனியார் ஆன்லைன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் தனியார் ஆன்லைன் நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், பெண்கள் இருவருக்கும் வழக்கை திரும்ப பெற கூறி பல விதமான மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இவர்கள் இருவர் குறித்து தனியார் யுடியூப் சேனல் நடத்துபவர் ஒருவர் ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வீடியோவை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் தொடர்ந்து தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எனவே, தங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது பெண்கள் புகார் appeared first on Dinakaran.

Related Stories: