×

கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜூலை 21: தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சாந்தி உத்தரவின்படி, அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சேசுராஜபுரம் அருகே கோம்பைகாடு மலை கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக அப்பகுதியை சேர்ந்த புத்திரி(54), அவரது மனைவி கோவிந்தம்மாள் (47), மகன் அய்யன் (29) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊறல் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

The post கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,DSP ,Shanti ,Anchetty ,Police Inspector ,Pankajam ,Kompaikadu hill village ,Sesurajapuram ,Putri ,Dinakaran ,
× RELATED அருப்புக்கோட்டையில் போராட்டத்தில்...