திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். அப்போது பேசிய அவர்; கல்வியையும், மருத்துவத்தையும் தமது இரு கண்களாக நினைத்து முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறார். நிதி ஒதுக்கீட்டில் கல்விக்குத்தான் அதிக நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் ஒதுக்கியுள்ளார் என்றும், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட என பல்வேறு சமுதாய மக்கள் திமுக ஆட்சியில் வளர்ச்சியடைந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

 

The post திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Related Stories: