இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வன்னியர் சங்க 45ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வன்னியர் சங்கம் 1980 ஜூலை 20ம் தேதி தொடங்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு அவர்களுடைய சாதி வாரியாக அதற்கேற்ப அவர் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பது தான் முதல் கோரிக்கை. தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை நாங்கள் வைத்துள்ளோம். முதல்வரை கோட்டையில் சந்தித்து நான் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் அது நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் அளவிற்கு ஒரு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இட ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: