அரியானா சட்டப்பேரவை தேர்தல் கெஜ்ரிவால் மனைவி இன்று முதல் பிரசாரம்

புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கெஜ்ரிவால் மனைவி சுனிதா இன்று முதல் பிரசாரம் தொடங்குகிறார். அரியானா மாநிலத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜ ஆட்சி நடக்கிறது. முதல்வராக நயாப்சிங் சைனி உள்ளார். அங்கு ஆம்ஆத்மி கட்சி 90 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்து உள்ளது.

இதை முன்னிட்டு டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா இன்று அங்கு பிரசாரத்தை தொடங்குகிறார். அரியானா பஞ்ச்குலாவில் உள்ள டவுன்ஹாலில் இதுதொடர்பான கூட்டம் நடக்கிறது. இதில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம்ஆத்மி தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக், சஞ்சய்சிங் எம்பி உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post அரியானா சட்டப்பேரவை தேர்தல் கெஜ்ரிவால் மனைவி இன்று முதல் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: