டெல்லி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டுள்ளது, தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. NIC இணையதொடர்புகள் பாதிக்கப்படவில்லை. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ‘ப்ளூ ஸ்கிரீன் ஆஃப் டெத்’ ஏற்பட்டுள்ளதாக பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.