மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

காரிமங்கலம், ஜூலை 19: காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, பிக்கனஅள்ளி, ஜக்கசமுத்திரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், மகேந்திரமங்கலம் ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நேற்று நடந்தது. பிடிஓ கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் குமார், ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மாவதி சுப்பிரமணி, முருகன், துணை பிடிஓ.,க்கள் சக்திவேல், சரளா, ஊர்நல அலுவலர் மேகநாதன், முன்னாள் தலைவர் குப்புராஜ், நடராஜன், கூட்டுறவு சங்க செயலாளர் கோவிந்தராஜ், முனியம்மாள் சண்முகம், அண்ணாமலை, சுகுணா சண்முகம், சக்திவேல், சின்னசாமி, கந்தன்செல்வம், சிவலிங்கம், லட்சுமணன், விஜயகுமார், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: