ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்: மாநிலத் தலைவர் பங்கேற்பு

திருவள்ளூர்: ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் உள்ள மங்களம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், மாவட்ட தலைவர்கள் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, லயன் ஆர்.எம்.தாஸ், இ.யுவராஜ், விக்டரி எம்.மோகன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பூவை பீ.ஜேம்ஸ், ஏ.ஜி.சிதம்பரம், திருவேற்காடு லயன் டி.ரமேஷ், விக்டரி எம்.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்பி ஜே.எம்.ஆரூண், டி.எல்.சதா சிவலிங்கம், கீழானூர் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ அருள் அன்பரசு, பவன்குமார், மாவட்ட முதன்மை துணைத் தலைவர்கள் சதா பாஸ்கரன், வேப்பம்பட்டு கே.ஆர்.அன்பழகன், மாவட்ட பொருளாளர் கிளாம்பாக்கம் எம்.சிவக்குமார், மாநில நிர்வாகிகள் இமாலயா அருண் பிரசாத், ஆர்.சசிக்குமார், ஆ.திவாகர், காங்கை குமார், ஒய்.அஸ்வின் குமார், புழல் குபேந்திரன், சி.பி.மோகன்தாஸ், ஏ.டி.கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், கே.கே.சாந்தாராம், தண்ணீர்குளம் குமரன், இ.கே.ரமேஷ், திவாகர் சுயம் பிரகாஷ், ஜோஷி பிரேம் ஆனந்த், ஈகை தேவேந்திரன், ஆர்.டில்லி சுரேஷ் உட்பட மாவட்ட, வட்டார, பேரூர், கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறும்போது, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு, சிபிஐ விசாரணைக்கு தற்போது அவசியம் இல்லை. தமிழ்நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான போலீஸ். இதனால் புலன் விசாரணை நடக்கட்டும். புலன் விசாரணையில் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு நாம் அதில் கருத்தை சொல்லலாம். எந்த உண்மையும் தெரியாமல், எந்த கருத்தையும் சொல்ல முடியாது. காவல்துறையின் புலன் விசாரணையில் உடன்பாடு இல்லை என்றால் பின்பு எங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறோம். குண்டாஸ், ரவுடி என அண்ணாமலை என்னை குறிப்பிட்டதை பெருமையாக பார்க்கிறேன். மறைந்த ஜெயலலிதா, எம்ஜிஆர், கலைஞர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தவர்தான் இந்த அண்ணாமலை. இதுபோல அவர் நிறைய பேச வேண்டும். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதை தொடர் நடவடிக்கையாக தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

The post ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம்: மாநிலத் தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: