தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை


டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 – 20 செமீ மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று ஓரிரு இடங்களில் 21செமீ-க்கும் அதிகமாக அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று ஓரிரு இடங்களில் 12 முதல் 20 செமீ வரையிலான மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: