இந்நிலையில், கேரளாவில் மழை கொட்டி வருவதால், மூணாறு பகுதியில் சாலையோரங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் மூணாறு-மறையூர் மாநில நெடுஞ்சாலையில், பெரியவாரை எஸ்டேட் அருகே, சாலையில் மரம் சாய்ந்தும், மண் சரிந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து வந்த மூணாறு தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கனமழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பயணத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
The post மூணாறு அருகே மரம், மண் சரிந்து போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.