தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே பயோ டீசல் கடத்திய கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவர் கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு 40,000 பயோ டீசலை கடத்தி வந்த கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.