கொரோனா விதிகளை மீறிய அலியா பட் மீது நடவடிக்கை

மும்பை: கொரோனா விதிகளை மீறிய நடிகை அலியா பட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. அலியா பட் நடித்துள்ள இந்தி படம் பிரம்மாஸ்த்ரா. இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக அலியா பட் டெல்லி சென்றார். அப்போது அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, நெகட்டிவ் என ரிசல்ட் வந்தால் மட்டுமே அலியா டெல்லிக்கு போக முடியும். ஆனால் இந்த விதிகளை மீறி அவர் டெல்லிக்கு சென்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றனர்….

The post கொரோனா விதிகளை மீறிய அலியா பட் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: