இதனிடையே கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
துறவிபோல் ஒரு வாழ்வு
பொதுநலம் துறவாத தொண்டு
கஜானா தன்வசம்
கரன்சி தொடாத கரம்
இலவசமாய் வழங்கியவை
வேட்டி சேலைகள் அல்ல
பதவிகள்
கட்டாந் தரையில்
கல்விப் பயிர் வளர்த்த
நல்லேர் உழவன்
எல்லா மழையும் பூமிக்கே
சிறுதுளி நீரையும்
சேமிப்பதில்லை வானம்
காமராஜர் வானம்
தோழர்களே!
காமராஜர் ஆட்சி அமைப்போம்
நல்ல முழக்கம்தான்
காமராஜர் ஆவோம் என்பது
அதனினும்
நல்ல திட்டம் அல்லவா?
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post “கஜானா தன்வசம் கரன்சி தொடாத கரம்” :காமராஜருக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் appeared first on Dinakaran.