இதனால் அங்குள்ள மெயினருவி, ஐந்தருவி, ஐவர்பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 3087 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3191 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 41.97 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 42.30 அடியானது. நீர் இருப்பு 13.30 டிஎம்சியாக உள்ளது.
The post ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.