தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இற்காக மதுரையில் மட்டும் 700 பேரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலத்தில் தனியார் பால் பண்ணைகளைவிட ஆவின் நிறுவனம் நாள்தோறும் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பால் கொள்முதல் 8.5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மதுரை ஆவின் கடந்த ஆண்டு ரூ.4.5 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. இந்தாண்டு இதைவிட அதிக லாபம் ஈட்டப்படும். பால் முகவர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அனைத்து கால்நடைகளுக்கும் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆவினில் இணைக்கப்படாத கால்நடைகளுக்கும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடை தீவனம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் முகவர்களுக்கு பால்களை விநியோகம் செய்வதற்கு புதிய நடைமுறைகள் திட்டமிடப்பட்ட வருகிறது.இவ்வாறு கூறினார். பேட்டியின் போது, ஆவின் பொது மேலாளர் சிவகாமி உட்பட பலர் இருந்தனர்.
The post பால் கொள்முதல் 8.5 சதவீதம் வரை உயர்வு; தமிழகத்தில் 10 ஆயிரம் கால்நடை பண்ணைகள் அமைக்க திட்டம்: பால்வளத்துறை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.