இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மீனவர்கள் மனு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு, ஒன்றிய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். இவரை ராமேஸ்வரம் விசைப்படகு சங்க மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சேசுராஜ், சகாயம் உள்ளிட்ட பலர் விடுதியில் சந்தித்தனர்.

அப்போது அவரிடம், இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்கக் கோரியும், மீட்க முடியாத நிலையில் உள்ள படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவ பிரதிநிதிகள் மனுவாக அளித்தனர்.

 

The post இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் மீனவர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: