அதற்கு அறநிலைய துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி கும்பாபிஷேகம் நடத்தலாம். பாலாலயம் ஏற்கனவே முடிந்து விட்டது. முருகன், விநாயகர் சிலைகள் அங்கு உள்ளதால் இது கோயில்தான் என்று வாதிட்டார். இதையடுத்து பூஜைகள், விழாக்களை அறநிலையத் துறை நடத்தலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. எனவே, கும்பாபிஷேகம் நடத்தும் விஷயத்தில் தலையிட முடியாது. அதேசமயம், பாம்பன் சுவாமிகள் கோயில், சமாதியா, கோயிலா என்று முடிவெடுக்க வேண்டியுள்ளதால் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் கூறினர்.
The post திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.