டூவீலர் மோதி மூதாட்டி பலி

மோகனூர், ஜூலை 12: மோகனூர் அடுத்த லத்துவாடி நல்லையகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி பழனியம்மாள்(62). இவர் நேற்று முன்தினம், நல்லையகவுண்டன்புதூரில் சாலையை கடக்கும் போது, அவ்வழியாக வந்த டூவீலர் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் பழனியம்மாளை மீட்டு, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post டூவீலர் மோதி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Related Stories: