வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான பனையபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. அங்கு மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி மற்றும் அனைத்து கட்சி முகவர்கள் முன்னிலையில் ஸ்டிராங் ரூமில் இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (13ம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது. 16 மேஜைகளில் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் வெற்றி நிலவரம் தெரிந்து விடும். இதற்கிடையே விக்கிரவாண்டி தொகுதி வாக்குகளை எண்ணும் அதிகாரிகளுக்கு இன்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பயிற்சி நடக்கிறது.
The post விக்கிரவாண்டியில் 82.48 சதவீத வாக்குப்பதிவு; நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை; வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு appeared first on Dinakaran.