உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்கிம்பூர் கேரி மற்றும் பிலிபித் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த சில பகுதிகளை பார்வையிட்டார். இந்த பகுதிகளில் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை அவர் பார்வையிட்டார்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பிரதாப்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்க்ராம்கர், ஜெத்வாரா, அண்டூ, மாணிக்பூர், கந்தாய் உள்ளிட்ட கிராமங்களில் மின்னல் தாக்கி 30 பேர் பலியாகி உள்ளனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோதும், வீட்டில் இருந்த போதும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் மின்னல் தாக்கி பலியாகின. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கிரிஷக் துர்காதன சஹாயதா திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்’ என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனிடையே பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், வெள்ளம், மின்னல், நிலச்சரிவு காரணமாக அசாம் மாநிலத்தில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். ஹிமாச்சல பிரதேசத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர்.
The post உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 38 பேர் பலி; கனமழையால் அசாமில் 84, ஹிமாச்சலில் 22 பேர் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.