இதுகுறித்து சுமையா பேகமின் தாய் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுமையா பேகம், காதலன் தங்கத்தமிழன் ஆகியோர் திருமணம் செய்து கொண்டு தம்பதியாக நேற்று முன்தினம் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு சென்றுள்ளனர். பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்று அங்கிருந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள நகர் பகுதிக்கு சென்று அங்கு உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
அதன் பிறகு போலீசார் தேடி வரும் விவரம் அறிந்து காதல் ஜோடி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்தடைந்து, அதன் பிறகு போலீசில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் வரவழைத்து அறிவுரை வழங்கினர். மேலும், இருவரும் மேஜர் என்பதால் காதலி தனது கணவருடன் செல்வதாக கூறியதன்பேரில் போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
The post வெவ்வெறு மதம் என்பதால் பெற்றோர் எதிர்ப்பு; காஷ்மீருக்கு விமானத்தில் பறந்து தம்பதியாக திரும்பிய காதல் ஜோடி: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் appeared first on Dinakaran.