ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து சிறையில் அடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் மாவட்ட கண்காணிப்பாளர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரவுடிகள் போலீசாரால் இரவு பகலாக கண்காணிப்பட்டு ரவுடிகளின் முழு விவரம் குறித்த மொத்த தகவலையும் அறிக்கையாக சமர்ப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதே நேரம் சிறையில் இருக்கக்கூடிய ரவுடிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு. அவர்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் அறிக்கையாக தாக்கல் செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
The post நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் என 400 ரவுடிகள் நெருக்கமாக கண்காணிப்பு!! appeared first on Dinakaran.