மேலும் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 22 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. 7 பேர் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் (41) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
The post கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்வு..!! appeared first on Dinakaran.