மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 80,396 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்

மும்பை: வர்த்தகம் தொடங்கிய உடனேயே பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் உயர்ந்து புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436 புள்ளிகள் உயர்ந்து 80,396 புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 391 புள்ளிகள் உயர்வுடன் 80,352 புள்ளிகளில் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 123 புள்ளிகள் உயர்ந்து 24,443 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 113 புள்ளிகள் உயர்ந்து 24,433 புள்ளிகளில் நிறைவடைந்தது.

The post மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 80,396 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம் appeared first on Dinakaran.

Related Stories: