புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: புரசைவாக்கம் திடீர் நகரில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும், பொது கழிப்பிடங்கள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும், தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிளை செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, பகுதி செயலாளர் முருகன் மற்றும் அப்பகுதி மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி துணை ஆணையர் லலிதாவிடம் மனு அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர், கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடன் கலந்து பேசி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

The post புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: