இதுகுறித்து அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. திருப்போரூர் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது அந்த வாலிபர் திருப்போரூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்யும் விஜயகுமார் (34) என்பதும், மதுப்பழக்கத்திற்கு ஆளாகி வேலைக்கு ஒழுங்காக செல்லாமல் சுற்றி வந்ததும் தெரிய வந்தது.
நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு மழைக்காக பத்திரப்பதிவு அலுவலகத்தின் உள்ளே நுழைந்து பின்னர் அங்கிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மழையினால் தூக்கிட்ட துணி நனைந்து அறுந்ததில் சடலம் கீழே விழுந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
The post திருப்போரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பேரூராட்சி பணியாளர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.