முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (32). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன் தினம் இரவு சவாரிக்குச் சென்றபோது நெய்குப்பி என்ற இடத்தில் ராஜேஷை ஆயப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு (33) மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து திடீரென ஆட்டோவை வழிமறித்தனர். பின்னர் ராஜேஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஆட்டோவை அடித்து நொறுக்கினர். இதை தடுத்தபோது ராஜேஸை கத்தியால் தலை, கழுத்து, தோல் பட்டை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஸை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பிரபு மற்றும் சிலரை தேடி வருகின்றனர். பிரபுவின் மனைவியும், ராஜேசும் நெருக்கமாக பழகியுள்ளனர். இதனால் பிரபுவுக்கும், ராஜேஷுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே ராஜேஷை வழிமடக்கி பிரபு வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

 

The post முன் விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவருக்கு சரமாரி வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: