நேற்று காலை 6 கால யாக பூஜையும் பிறகு 9.30 மணியளவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு 5 கோயில்களிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரால் அபிஷேகம் செய்யும் முன்பாக வானத்தில் 5 கருடன்கள் வட்டமிட்டு ஆசீர்வதித்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்து ‘’கோவிந்தா, கோவிந்தா’’ என முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post வயலூர் கிராமத்தில் 1000 ஆண்டு பழமையான அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.