கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 455 மனுக்கள்

 

ஈரோடு, அக். 1: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை அடங்கிய 455 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வீட்டு மனை பட்டா, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என பொதுமக்கள் மொத்தம் 455 மனுக்களை அளித்தனர்.

இந்த மனுக்ளை பெற்ற கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர்களின் முகாம் அலுவலகத்தில் பெறப்பட்ட மனுக்கள், கடந்த முறை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர்(பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் குவிந்த 455 மனுக்கள் appeared first on Dinakaran.

Related Stories: