இதனால் கச்சிராயபாளையம், கல்வராயன்மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் கேரளா, பெங்களூரு என கடந்த ஒருவாரத்திற்கு முன் தப்பி ஓடிவிட்டனர். அவ்வாறு தப்பி ஓடியவர்களை கணக்கெடுத்து போலீசார் அங்கு சென்று கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த கச்சிராயபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மண்மலை கிராமத்தை சேர்ந்த கள்ளச்சாராயம் வியாபாரி ஆறுமுகம் (40) என்பவரை கூலி தொழிலாளி போல் மாறுவேடத்தில் சென்று போலீசார் கைது செய்தனர். இவர் மீது 10க்கும் மேற்பட்ட சாராய வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post கேரளாவில் பதுங்கிய கள்ளச்சாராய வியாபாரி கைது appeared first on Dinakaran.