ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

இடைப்பாடி: இடைப்பாடி அடுத்த சின்னமணலி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து(42). விசைத்தறி அதிபர்.அங்கமுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ரூ.1.50 லட்சத்தை இழந்துள்ளார். இதையடுத்து, அவரது மனைவி ராஜலட்சுமி, தனது தாலியை விற்று கணவனின் கடனை அடைத்து உள்ளார். அதன் பின்னரும் அங்கமுத்து விட்ட பணத்தை மீட்க, தொடர்ந்து ரம்மி ஆடியுள்ளார். இதில் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த அங்கமுத்து, நேற்று முன்தினம், வீட்டில் சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

The post ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: