எனினும், மாமல்லபுரம் இசிஆர் சாலையில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரங்களில் அனைத்து மின்விளக்குகளும் சரிவர எரிவதில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்திருப்பதால், அங்கு அதிகளவில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அப்பகுதிகளில் இரவு நேரங்களில் தனியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளிடம் வழிப்பறி, செயின் மற்றும் செல்போன் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே, மாமல்லபுரம் இசிஆர் சாலையில் பழுதான மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத மின்விளக்குகளால் வாகன விபத்து அபாயம்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.