ஏழு நொடியில் 1330 திருக்குறள்/1330 மாணவர்கள் கூறினர்: கடலூர் பள்ளி மாணவர்கள் சாதனை

கடலூர்: கடலூர் கம்மியம் பேட்டை அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் 7 நொடியில் 1330 திருக்குறளை 1330 மாணவர்கள் கூறும் நிகழ்ச்சியில் திருக்குறளை கூறி சாதனை படைத்தனர். கடலூர் அரிஸ்டோப் பப்ளிக் பள்ளியின் தமிழ் துறை சார்பில் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து 1330 திருக்குறளை 1330 மாணவர்கள் ஒரே நேரத்தில் கூறும் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில் ஏழு நொடியில் 1330 திருக்குறளை 1330 மாணவர்கள் ஒரே நேரத்தில் கூறி சாதனை நிகழ்த்தினார் நிகழ்ச்சிக்கு கடலூர் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி தாளாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் கஸ்தூரி சொக்கலிங்கம், தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி முன்னிலை வகித்தனர் பள்ளி முதல்வர் மதுர பிரசாத் பாண்டே வரவேற்றார் மாவட்ட மெட்ரிக் பள்ளி அதிகாரி சாந்தி திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் அருள் ஜோதி ஜோதி சாதனை புத்தகத்தின் செயலர் கலைவாணி உலக சாதனையாளர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் 1330 மாணவர்கள் 1330 திருக்குறளை ஏழு நொடியில் கூறி சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் கராத்தே பயிற்சி பள்ளி சாதனையாளர் சென்சாய் கிருஷ்ணன் பள்ளியின் துணை முதல்வர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஏழு நொடியில் 1330 திருக்குறள்/1330 மாணவர்கள் கூறினர்: கடலூர் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: