ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி தரப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து பணிக்கு தேர்வான 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

The post ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Related Stories: