அண்ணாமலைக்கு பாஜ கவுன்சிலர் கொலை மிரட்டல்

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சி 12வது வார்டு பாஜ கவுன்சிலர் சிவா செல்வராஜ். திருப்புவனம் மேற்கு ஒன்றிய பாஜ செயலாளர் மோடி பிரபாகரன். இருவருக்கும் கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தோற்றது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மோடி பிரபாகரன் உள்ளிட்ட 2 பேர், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சில நாட்களுக்கு முன் சிவா செல்வராஜ் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை செல்போனில் அவதூறாக பேசி சிவா செல்வராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோவுடன் திருப்புவனம் போலீசில் மோடி பிரபாகரன் மற்றும் அக்கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

The post அண்ணாமலைக்கு பாஜ கவுன்சிலர் கொலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: