டூவீலர் மீது லாரி மோதி பெங்களூரு வாலிபர் பலி

தர்மபுரி, ஜூலை 2: கர்நாடக மாநிலம், பெங்களூரு கோத்தானூர் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியநாரயணன். இவரது மகன் வினை பரத்வாஜ்(28). இவர் நேற்று முன்தினம் காலை பெங்களூருவில் இருந்து நண்பர்களுடன் டூவீலரில் ஒகேனக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மதியம், தர்மபுரி-ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில், பாலக்கோடு கல்கோடஅள்ளி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்து வந்த பாலக்கோடு போலீசார் அவரது சடலததை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலர் மீது லாரி மோதி பெங்களூரு வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: