தேசிய மருத்துவர்கள் தினம்: ஓபிஎஸ் வாழ்த்து

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய சுதந்திர போராட்ட வீரரும், புகழ் பெற்ற மருத்துவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ‘பாரத ரத்னா’ டாக்டர் பி.சி. ராய் பிறந்த தினமான ஜூலை 1ம்தேதி தேசிய மருத்துவர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், மருத்துவர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவத்தில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக வகிக்கிறது என்றால், அதற்கு முக்கியக் காரணமாக விளங்குபவர்கள் மருத்துவர்கள். அந்த வகையில் மருத்துவர்களுக்கான அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post தேசிய மருத்துவர்கள் தினம்: ஓபிஎஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: