ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலையை தீவைத்து சேதப்படுத்துவதா? செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

சென்னை: ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சிலையை தீவைத்து சேதப்படுத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமது இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடி, நம்பிக்கையை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்.

அத்தகைய வலிமையான தலைவர், ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த பின்னர், மொழியின் அடிப்படையில் அமைந்த ஆந்திர மாநிலம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்பணித்துக் கொண்ட ராஜசேகர ரெட்டியின் உருவச் சிலையை தீவைத்து சேதப்படுத்தியிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிகிறது. இதைவிட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சிலையை தீவைத்து சேதப்படுத்துவதா? செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: