வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 10.65 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம்

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 10.65 ஹெக்டேர் நெற்பயிர் சேதமடைந்துள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், வேலூர் மாவட்டத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கனமழை பெய்யவில்லை. மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், இரவு நேரங்களில் மழை பெய்கிறது. தொடர் மழையால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் 18 விவசாயிகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 10.65 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையினால் 10.65 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: