சென்னை: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்தனர். கேரளாவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் விரைந்தனர். ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் 14 நாட்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார்.