இந்நிலையில், கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு அடையாளம் தெரியாத நபா் ஒருவா் இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ள நிலையில் விமான நிலைய வளாகம் முழுவதும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த 19ம் தேதி கோவை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் தற்போது மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
The post கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.