பின்னர் தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என உத்தரவிட வேண்டும் என டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போது தேர்தல் பிரசாரத்திற்காக ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. பின்னர் 2ம் தேதி மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை ஜூலை 3ம் தேதி வரை நீடித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக இடைக்கால ஜாமினை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்த நிலையில், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது. மேலும் ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
The post டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.