இதுகுறித்து தகவலறிந்த அம்பலூர் போலீசார் சம்பவ இடம் வந்து, சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில் சினேகாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி சமீபத்தில் மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்றுள்ளனர். அவர்கள் சினேகாவின் ஜாதகம் சரியில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால் சினேகா மனவேதனையில் இருந்துள்ளார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சினேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஜாதகம் சரியில்லை என்றதால் கல்லூரி மாணவி தற்கொலை appeared first on Dinakaran.