சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பக்ரீத் பண்டிகையையொட்டி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

அதிகாலை 5 முதல் 8 மணி வரையும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரையும் 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்: நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: