அங்கிருந்த காரை எடுக்க முயன்ற 5 பேர் சிறுத்தையை பார்த்ததும் காருக்குள் அமர்ந்து கதவை மூடிக் கொண்டனர். சிறுத்தை வெளிவராமல் இருக்க அப்பகுதியினர் கார் ஷெட்டை இழுத்து மூடிவிட்டனர். இதனால் காருக்குள் 5 பேரும் தவித்தபடி இருந்தனர். தகவலறிந்த திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி ஆல்பர்ட் ஜான், வனச்சரகர் சோழராஜன் ஆகியோர் சென்று சிறுத்தையை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இரவு 9 மணியளவில் வனத்துறையை சேர்ந்த மயக்கவியல் நிபுணர் சுகுமார் தலைமையிலான குழுவினர் கூண்டு, துப்பாக்கி, மயக்க ஊசி உள்ளிட்ட உபகரணங்களுடன் ஏணி மூலம் உள்ளே சென்றனர். காரில் சிக்கியிருந்த 5 பேரையும் பத்திரமாக மீட்டனர். அப்போது சிறுத்தை ஒரு காருக்கு அடியில் தலையை மட்டும் வெளியே நீட்டியபடி படுத்திருந்தது. அதிகாலை சுமார் 3 மணியளவில் மயக்கவியல் நிபுணர் சுகுமார் தரையில் பதுங்கியபடி சென்று சிறுத்தையின் தொடை பகுதியில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார்.
சில நிமிடங்களில் சிறுத்தை மயங்கியது. இதையடுத்து சிறுத்தையை மீட்டு கூண்டில் அடைத்தனர். நேற்றுமுன்தினம் மாலை 4 மணியில் இருந்து 12 மணி நேரம் பொது மக்களை அச்சுறுத்தி விடிய, விடிய போக்குகாட்டிய சிறுத்தை பிடிபட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதையடுத்து அதிகாலையில் சிறுத்தையை கூண்டுடன் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு கூண்டை திறந்தவுடன் சீறிப்பாய்ந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
The post திருப்பத்தூரில் 12 மணி நேரம் மக்களை அச்சுறுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்: ஆந்திர வனப்பகுதியில் விடப்பட்டது appeared first on Dinakaran.