இந்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வங்கி ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வரும் 19ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
The post அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜி மனு மீது 19ல் தீர்ப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு appeared first on Dinakaran.
