ஆனால், ஒன்றிய அரசோ, மாநில அரசோ இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராக கருத வேண்டும். எனவே 2022ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருதியிருந்தால், மனுதாரர் தனது வாழ்க்கையின் வழியை கண்டிருப்பார். உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால், தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவார். எனவே கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் கூறிய நீதிபதி, அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
The post கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.