ஆனால், ஒரு சில தனியார் நிறுவனங்கள் முறைகேடாக அவ்வப்போது இந்த கழிவு நீரை பாலாற்றில் விடுவதாக கூறப்படுகிறது. அதேபோல் இன்று காலையும் பாலாற்றில் அதிகளவு கழிவுநீர் நுரையுடன் வெளியேற்றப்பட்டிருந்தது. இதனால் பாலற்றில் துர்நாற்றத்துடனும் பொங்கும் நுரையுடனும் கழிவுநீர் கலப்பதாகவும் ஆம்பூர் அடுத்த சோமலாபுர கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் கால்நடைகள் தண்ணீர் அருந்தவும் இயலாத நிலையில் ஆற்றுநீராக மாறிவிட்டது. விவசாயம் மற்றும் இதர பயன்பாட்டிற்கான நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆம்பூர் அருகே சோமலாபுரத்தில் பாலாற்றில் பொங்கும் நுரையுடன் துர்நாற்றம் appeared first on Dinakaran.